Ad Widget

பிரதமர் தலைமையில் பொதுமக்கள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சந்திப்பு

பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது.

குறித்த சந்திப்பில் மக்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த சந்திப்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீள்குடியேற்ற அமைச்சர்,மகளிர் விவகார அமைச்சர்,பிரதி அமைச்சர் ,யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts