Ad Widget

பாப்பரசர் முதல் தடவையாக தமிழில் ஆசிச்செய்தி

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் முதல் தடவையாக தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார்.

pop

பாப்பரசர் இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றுக் காலை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகப் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமானார்.

அதற்கு முன்னதாக அவர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இறைவன் இலங்கையை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக என்று தமிழ் மொழியில் தனது ஆசிச்செய்தியை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் சிங்களம் மற்றும் ஆங்கிலமொழிகளிலும் குறித்த ஆசிச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாப்பரசர் ஒருவர் தனது ஆசியை முதல் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்ட நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts