Ad Widget

பாப்பரசர், மடுவில் 14ஆம் திகதி திருப்பலி ஒப்புகொடுப்பார்

இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், மன்னார் மடு திருத்தலத்திற்கு 14ஆம் திகதி வருகை தந்து மாலை 3 மணிக்கு திருப்பலி ஒப்புகொடுப்பார் என கர்தினால் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை உறுதிப்படுத்தியுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

pop-papprasar

இது தொடர்பாக அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், காலி முகத்திடலில் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுப்பார். மாலை 3 மணிக்கு வரலாற்று பிரசித்தி பெற்ற மடுத்திருத்தலத்திற்கு வருகை தர இருக்கின்றார்.

மடுவிற்கு வருகை தரும் அவர் சுமார் ஒரு மணி நேரம், எமது மக்களோடு இணைந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆசிர் வழங்குவார் என்றும் அவர் கூறினார்.

Related Posts