Ad Widget

பாப்பரசரைத் தரிசிக்க மடுவில் இலட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பு!

இலங்கைக்கு இரு நாட்கள் திருயாத்திரை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வருகை தருவார்.

pop

பாப்பரசரிடம் ஆசி பெற இலட்சக்கணக்கான மக்கள் மடுத் திருத்தலத்தில் காத்திருக்கின்றனர்.

இதேவேளை மடுப் பிரதேசத்தில் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து விமானப் படையின் ஹெலிகொப்டரில் மடுத் திருத்தலத்துக்கு வரும் பாப்பரசர் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை மடுமாதா புகழ்ச்சி வழிபாட்டில் பங்குகொண்டு மக்களுக்கு இறை ஆசீ வழங்குவார்.

இதன்போது சிறுவர், சிறுமிகள், இளைஞர், யுவதிகள், குருக்கள், அருட்சகோதரிகள், கத்தோலிக்க மக்கள், கத்தோலிக்கர் அல்லாத மக்கள், போரினால் உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் காணாமற்போனோரின் உறவுகளையும் பாப்பரசர் சந்திப்பார்.

Related Posts