Ad Widget

பாதுகாப்பு படையினரால் மானிப்பாயில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி திறப்பு

army-open13 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட விநாயகர் முன்பள்ளிக் கட்டிடம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக 51 ஆவது படைப்பிரின் கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் அபேநாயக்க கலந்துகொண்டு முள்பள்ளிக்கட்டிடத்தினை திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டித்திறப்பு விழாவில் 512 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி அஜித் பல்லேகலா, 513 ஆவது படைப்பிரிவின் தளபதி அரமசிங்க, பிரதேச செயலர் முரளிதரன், மஞ்சி நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts