Ad Widget

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவருக்கு விளக்கமறியல்!

பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கல்லூரி ஒன்றின் ஓய்வுபெற்ற பிரதி அதிபரான சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால் குற்றச்சாட்டப்பட்டு குறித்த நபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணி, இவ்வாறான சம்பவத்தின் மூலம் மேலும் வித்தியாக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு சந்தேகநபரை விளக்கமறியல் வைப்பது அவசியம் என வாதிட்டார்.

சந்தேகநபரை பிணையில் விடுமாறு அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரினார். எனினும் பிணை மனு நிராகரிக்கப்பட்டு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Related Posts