Ad Widget

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு திடீர் சோதனை! தகுதியற்றவைக்கு இடைக்காலத் தடை!!

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வான்கள், பஸ்கள், ஓட்டோக்கள் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவும் பொலிஸாரும் இணைந்து இன்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது நூற்றுக்கணக்காக வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது வீதிப் போக்குவரத்தில் ஈடுபடத் தேவையான ஆவணங்கள், வாகனங்களுக்கான தகுதிகள் பரிசோதிக்கப்பட்டன.

இவ்வாறு போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், தொடர்ச்சியாகச் சேவையில் ஈடுபட இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் உரிய ஆவணங்கள், வாகனத்துக்காக தகுதிகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சேவையில் ஈடுபட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற சோதனையில் போது மிகச் சில வாகனங்களே தொடர்ச்சியாகச் சேவையில் ஈடுபடும் தகுதியுடன் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts