Ad Widget

பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை

வடமாகாண பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு புதிய ஆளுநரான எச்.எம்.ஜீ.எஸ்.பளிக்ஹக்காரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், சனிக்கிழமை (17) தெரிவித்துள்ளார்.

Joshep-starlin2

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில், பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியுள்ளனர்.

அத்துடன் பாடசாலை நடைபெறும் காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்கள், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விபரங்கள் இராணுவத்தினரால் சேகரிக்கப்படுகின்றன.

இதனால் பல அசௌகரியங்களை பாடசாலை சமூகம் எதிர்நோக்கியுள்ளது. எனவே விரைந்து தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts