Ad Widget

பஸிலின் விளக்கமறியல் நீடிப்பு

பொருளாதா அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உள்ளிட்ட மூன்று நீதவான்கள், சற்றுமுன்னர் உத்தரவிட்டனர்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோடி தொடர்பில், பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஆர்.கே.ரணவக்க மற்றும் திவிநெகும திட்டத்தின் பிராந்திய பணிப்பாளர் பந்துல திலகசிறி ஆகியோர், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts