Ad Widget

பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

பல்வேறு திருட்டுக்களுடனும் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரிடம் இருந்து பல்வேறு வகையான பெறுமதிக்க பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. பண்டத்தரிப் பல்லசுட்டியைச் சோந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் மறைந்திருந்த வேளை இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாரீத் ஹவுஸ் தலைமையில் சென்ற பொலிஸ் குழவினரால் கைதுசெய்யப்பட்டார்.

robberey-items-ilavalai

அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் உபகரணங்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும மடிக்கணனி, சிறிய மின்பிறப்பாக்கி, றோடியோக்கள் உட்பட பல பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர றொஹான் டயஸ், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலாந்த ஜெயவர்த்தனா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் தலைமறைவாக இருந்த குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts