பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம்!

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வட்ஸ் அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக காணொளிகள் அல்லது புகைப்படங்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் அளிக்க முடியும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related Posts