Ad Widget

பல்கலை. பரீட்சைகளை ஒன்லைனில் நடத்தும் திட்டத்தில் மானிய ஆணைக்குழு கவனம்!!

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையம் (Online) ஊடாக நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் பரவல் நிலமை காரணமாப பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இது குறித்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கான திட்டத்தை தயாரிக்க தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Related Posts