Ad Widget

பல்கலை அனுமதிக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

university _grants_ commission_ srilankaபல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று(23.04.2014) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர் எனவும், இதில் தேசிய ரீதியாக விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் உள்ளடங்குவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டுள்ளார்.

இதன் பொருட்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் ஆலோசனை கைநூல் விநியோக நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மே மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் மானியங்கள் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

Related Posts