யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு, பல்கலைக்கழக நிர்வாக தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
கனிஷ்ட மாணவர்கள் இடுப்புப் பட்டி அணிந்து வருவதற்கும் மரங்களின் கீழுள்ள பென்ச்களில் அமர்வதற்கும் சிரேஷ்ட மாணவர்கள் அனுமதியளிக்க மறுத்தனர். அதனையும் மீறி கனிஷ்ட மாணவர்கள் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டு, ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியுள்ளது.
சில மாணவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட போதும் எவரும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.