Ad Widget

பலாலி படைத்தலைமயகத்திலிருந்து தப்பி சென்ற இராணுவகோப்ரலினை கைது செய்ய நடவடிக்கை!

பலாலிபடைத்தலைமயகத்தில் கடமையாற்றிய இராணுவசிப்பாய் காணாமல் போயிருந்த நிலையில்
அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரீ 56 ரக துப்பாக்கி வீமான்காமம் பகுதியில் இருந்து நேற்று (11) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தகவல்கள் தெரிவித்திருந்தனர்.

பலாலிபாதுகாப்பு தலைமையகத்தில் கடந்த 9ம் திகதி இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் காணாமல் போனவிடயம் கடமைக்கு வேறு ஒரு சிப்பாய் சென்றிருந்த போது தெரியவந்தது.

இது தொடர்பில் இராணுவப்பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து வீமன்காமம் மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (11) படையினர் திடிர் சோதனை நடவடிக்கையினை முன்ணெடுத்திருந்தனர்.

இந் நிலையில் வீமான்காமம் பகுதியில் இருந்து குறித்த இராணுவகோப்ரலின் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரீ.56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.

தப்பி சென்ற இராணுவகோப்ரலினை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts