Ad Widget

பருத்தித்துறை பொதுச் சந்தை வியாபாரிகள் மூவர் உள்பட ஐவருக்கு கோரோனா தொற்று

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமானோரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அதனால் பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளும் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Related Posts