Ad Widget

பருத்தித்துறையில் குழு மோதல்

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

fight-2

சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் – கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Related Posts