பருத்தித்துறை சாரையடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைத்ததும் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட குருதிப்போக்குக் காரணமாக இன்று காலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் அவர் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அதனால் அவரது சடலம் பிசிஆர் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.