Ad Widget

பருத்தித்துறையிலிருந்து புன்னாலைக்கட்டுவனூடாக யாழ்பாணத்துக்கு பஸ் சேவை

பருத்தித்துறையிலிருந்து புன்னாலைக்கட்டுவனூடாக யாழ்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (01) முதல் பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி தெரிவித்தார்.

இந்த சேவையில் ஈடுபடும் பஸ்கள் பருத்தித்துறையிலிருந்து அச்சுவேலியூடாக புத்தூருக்குச் சென்று, புத்தூரூடாக புன்னாலைக்கட்டுவான் பின் பலாலி வீதியூடாக யாழ். பஸ் நிலையத்தை சென்றடையும்.

மேலும், 5 வருடங்களின் பின் இந்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமும் 3 வேளை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. காலை 6.30, 10.30 மற்றும் மாலை 3.45 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து யாழ். நோக்கி பேருந்து புறப்பட்டு செல்லும்.

யாழ் செல்லும் பேருந்து மீண்டும் அவ் வீதியூடாக பருத்தித்துறையைச் சென்றடையும். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களின் நன்மை கருதியே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts