Ad Widget

பரீட்சை நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு!

powercutகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டினால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தரப்பரீட்சைக்கு தேற்றும் மாணவர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை மின்சார சபையின் சுன்னாக பிரிவினர் பல வருடங்களாக கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமாகும் நாட்களில் மின்வெட்டை மேற்க்கொள்வதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டும்லாது அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் மின் சாதனங்களும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Related Posts