Ad Widget

பரந்தன் சிறுமி வன்புணர்வு; கண்டித்து இன்று போராட்டம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர் மக்களும் பாடசாலை மாணவர்களும் இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

புங்குடுதீவு சிறுமி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்னர் பரந்தன் – சிவபுரத்தில் மற்றுமொரு சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள்.

கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் கூட்டு வன்புணர்வு இல்லை என்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனினும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் சிறுமியின் சம்பவம் தொடர்பில் இருவரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

எனவே வடக்கில் தொடரும் இவ்வாறான சம்பவங்களைக் கண்டித்தும் நீதியைப் பெற்றுத்தரவும் கோரி இன்று கண்டனப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

Related Posts