Ad Widget

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்ப்பாணத்தில் நினைவுத்துாபி

ஸ்ரீலங்காவில் ஊடக பணியின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

44 ஊடகவியலாளர்கள் ஊடக பணியின் போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நினைவாக குறித்த நினைவுத்தூபிஅமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தூபியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகத்துறை அமைச்சர் கஜயந்த கருணாதிலக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரின் பெற்றோர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

குறித்த துாபியில் வடக்கு தெற்கு ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை அமைச்சர், மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

media-thubi-2

media-thubi-1

Related Posts