சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெற இது வரையிருந்த டோக்கன் சிஸ்டம் இல்லாதொழிக்கப்பட்டு , மருத்துவ சான்றிதழுக்கான விண்ணப்ப படிவங்களில் திகதியிடப்பட்டு வழங்கப்படவுள்ளன.
திகதியிடப்பட்ட திகதியன்று சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை பெற முடியும். இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளார்.
தொடர்புடைய செய்தி