Ad Widget

நெடுந்தீவு கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பத்து இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஜகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (புதன்கிழமை) இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

குறித்த மீனவர்களை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Posts