Ad Widget

நெடுந்தீவில் குதிரைகள் சரணாலயம்

நெடுந்திவு பிரதேசத்தில் குதிரைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், ‘எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்தின் ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 537 ஹெக்டேயர் காணியில் குதிரைகள் சரணாலயம் அமைக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்துக்கு காணி கையளித்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தோமையர் கிராமத்தில் 4 பரப்பு காணியும் கையளிக்கப்பட்டுள்ளது’ என அவர் கூறினார்.

Related Posts