Ad Widget

நுண்கலைப்பீட மாணவர்கள் ஐவர் கைது

பொலிசாருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

00(4)

66(2)

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்தில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே, பொலிசே மாணவரை பொங்க வைக்காதே, பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 05 மாணவர்களைக் கைதுசெய்தனர்.

,

Related Posts