யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி, நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி அவர்களை காயப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனங்களை சேதமாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்களுடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.