Ad Widget

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது; -வடக்கு முதல்வர்

vicknewaran-tna“பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது” – இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,

யாழ்.நகரிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு ஆளுநரை மாற்றுமாறும், படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய, நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கேள்வியயழுப்பியபோது எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லையா என்பது தான் கேள்வி. நான் ஒன்றைச் சொல்ல, அதற்கு பதில் சொல்ல நான் மீண்டும் என்று சொல்வேன்.

அவ்வாறு விவாதம் நடத்தத் தேவையில்லை. விவாதத்தில் எனக்கு நல்ல பரீச்சயமுண்டு. நாங்கள் இந்த நாட்டிலே ஒத்துழைப்பையும் ஒருமித்த தன்மையையும் கொண்டுவரப் பாடுபடுகின்றோம்.

இந்தப் போருக்குப் பின்னர் எங்கள் தமிழ் மக்கள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள். எங்களுக்கு, எங்களுடைய வாழ்கையை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறுவது கடமை. அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பு.

ஜனாதிபதி தான் நினைத்ததே தான் சரி. நீங்கள எதைப் பற்றி யோசித்தாலும், எதைப் பற்றிச் சிந்தித்தாலும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நான் அதற்குப் பொறுப்பல்ல. நான் நினைத்ததையே செய்வேன் என்றால் என்பதில் சொல்ல முடியாது.

ஆனால், எங்களுடைய பிரச்சினைகளை எடுத்தச் சொல்லும் போது பக்கச் சார்பான பிரச்சினை என்று எடுத்துக் கொள்வது பிளையானது. இராணுவம் இருப்பதால் நாங்கள் எங்கள் நாளாந்த வேலைகளை செய்யமுடிவதில்லை. படிப்படியாகவாவது இராணுத்தை அகற்றுங்கள் என்று கேட்கின்றோம். இராணுவத்தில் இருந்து ஆணையிடும் ஒருவரால் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாது. எனவே ஆளுநரை மாற்ற வேண்டும். இதனை வேறுவிதமாக வியாக்கியானம் செய்தால் அதனால் பாதிப்படைவது நாங்கேள – என்றார்.

Related Posts