Ad Widget

நாவாந்துறையில் கட்டுமானப் பொருட்கள் வழங்கிவைப்பு

army-donateநாவாந்துறை பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிகமாக வீடுகளை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் இன்று திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு சீமெந்து, தகரம், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

512ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் நாவாந்துறையில் உள்ள புதிய பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அபேநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டுமானப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் 512ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் அஜித் பல்லேகல, படை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts