Ad Widget

நாவற்குழியில் புகையிரதம் மீது கல்வீச்சு; இராணுவ சிப்பாய் காயம்

நாவற்குழியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை பயணித்த புகையிரத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீதுபட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக சாவசக்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts