Ad Widget

நாளை முதல் யாழ்-பருத்தித்துறை இடையே புதிய பஸ் சேவை!!

நாளை முதலாம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை 750 பாதையில் புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பருத்தித்துறை- திக்கம்- தேவரையாளி-நெல்லியடி வீதியூடாக பஸ் பயணிக்கும். பருத்தித்துறையில் இருந்து காலை 6.35, 10.35, பிற்பகல் 3.10 மணிக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.45, பிற்பகல் 12.45,
மாலை 5.15 மணிக்கும் இது பயணிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts