Ad Widget

நாயை கட்டி வளர்க்காத உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக 75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (05) விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

மேற்படி வீட்டில் 3 நாய்கள் வளர்க்கப்படுவதாகவும், அவற்றில் இரண்டு நாய்களுக்கு விசர் நாய் தடுப்பூசி ஏற்றப்படவில்லையென மூதாட்டி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டை தெரிவித்த மூதாட்டி அதன் பின்னர் அச்சுவேலி வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்

Related Posts