Ad Widget

நாட்டை விட்டு வெளியேறுகிறார் தில்ஷான்?

இலங்கை அணி வீர ர் திலகரட்ண தில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப்போவதில்லையென அறிவித்துள்ளார்.

உபாதை காரணமாக இம்முடிவை எடுத்த தாக அவர் தெரிவித்துள்ளார்.

Dilshan-and-his-family

எனினும் தில்ஷானிடம் ஒரு நாள் தொடரில் விளையாடவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்ட தாக தகவல் கசிந்துள்ளது.

இதுதவிர தில்ஷான் குடும்பத்தோடு அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகவும் , அவர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடப்போவதாகவும் தகவல்கள் சில வெளியாகியுள்ளது.

தில்ஷான் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் நம்பத் தகுந்த வட்டாரங்களின் படி அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் ஒருநாள் , இருபதுக்கு 20 போட்டிகளில் மாத்திரமே விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் அவர் விரைவில் தனது ஓய்வு மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

Related Posts