Ad Widget

நாட்டை பிரிக்க முயலும் கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. எனினும் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டப்­போ­கின்­றது என்ற அச்சம் அக்­கட்­சியின் தலைவர் சம்­பந்­த­னுக்கு ஏற்­பட்டு விட்­டது என அர­சாங்கம் தெரி­வித்­தது. சர்­வ­தேச அமைப்­புக்­களை தூண்­டி­விட்டு நாட்டை பிரிக்க முயற்­சித்து வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு சர்­வ­தே­சத்­தி­னா­லேயே அழிவு ஏற்­படும் எனவும் அர­சாங்கம் எச்­ச­ரித்­துள்­ளது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த அர­சாங்கம் நினைக்­கின்­றது என அக் கட்­சியின் தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­துள்­ளதை அடுத்து அது தொடர்பில் அர­சாங்­கத்­திடம் வின­விய போதே அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கெஹ­லிய ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

Keheliya-Rambukwella

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிரி­வினை வாதத்­தினை தூண்­டு­வதும் நாட்டை பிள­வு­ப­டுத்த நினைப்­பதும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வேலையே தவிர அர­சாங்கம் யாரையும் அழிக்க ஒரு­போதும் செயற்­ப­டாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை பிள­வு­ப­டுத்­து­வ­தனால் அர­சாங்­கத்­திற்கு எவ்­வித இலா­பமும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. அவ்­வா­றா­ன­தொரு அவ­சி­யமும் எமக்கு இல்லை. எனினும் கூட்­ட­மைப்பின் தலை­வரே அவ்­வா­ற­ன­தொரு கருத்­தனை குறிப்­பிட்­டி­ருப்­பது உண்­மை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் பிள­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதா என்று எண்ணத் தோன்­று­கின்­றது.

கட்­சிக்குள் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தெனின் அதனை தீர்த்து வைக்க முயற்­சிக்க வேண்­டுமே தவிர அர­சாங்­கத்தை குற்றம் சுமத்­து­வது அர்த்­த­மற்ற ஒன்­றாகும். அதேபோல் ஊட­கங்­களின் கருத்­துக்கள் தனித்­து­வ­மா­னவை. அதனை அர­சாங்­கத்­துடன் ஒப்­பிட்டு பேசவும் முடி­யாது.

மேலும் இன்று சர்­வ­தேச அமைப்­பு­களின் மூலம் அவர்­களின் அழுத்­தங்­களை பயன்­ப­டுத்தி இந்த நாட்டை பிள­வு­ப­டுத்த நினைப்­பது அர­சாங்­க­மல்ல, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரே. இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச ரீதியில் செயற்­ப­டு­வதும் பொய்­யான சாட்­சி­களை தயா­ரித்து கொடுப்­பதும் அர­சாங்­க­மல்ல, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரே. இந்த நாட்டின் பிர­ஜை­க­ளாக இருந்து கொண்டு தாய் நாட்­டிற்கு எதி­ராக துரோகச் செயல்­களில் ஈடு­ப­டு­வது கண்­டிக்­கத்­தக்க விட­யமே. எனினும் அவர்­க­ளுக்கும் இலங்­கையில் அர­சியல் செயல்­களில் ஈடு­பட உரிமை உண்டு. அதனை நாம் ஏற்றுக் கொண்­டுள்­ளதன் கார­ணத்­தி­னா­லேயே இடமளித்துள்ளோம்.

எனினும் இன்று சர்வதேசத்துடன் கைகோர்த்து தாய் நாட்டிற்கு புதிதாக இந்த நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினாலேயே அழிவை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts