Ad Widget

நாட்டின் வடபகுதிகளில் கனமழை பெய்யும்!!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்கமானது இன்று (6) தென்கிழக்கு வங்கக்கடலில் தாழமுக்கமாக வலுப்பெற்று இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் படிப்படியாக வலுவடைந்து ஒரு சூறாவளியாக மாறி டிசம்பர் 08 ஆம் திகதிக்குள் வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை சென்றடையும்.

டிசம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு இன்று (6) நண்பகல் முதல் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீனவ சமூகங்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts