Ad Widget

நாடு முழுவதும் மழையும் காற்றும்!

நாடு முழுவதிலும் ஓரளவு பலமான காற்று வீசலாம் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் வேகம் மணிக்கு 50 -60 இடைப்பட்டதாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணம் என்பவற்றிலும், யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசத்தில் தற்காலிகமாக வேகமான காற்றும் வீரக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Related Posts