Ad Widget

நாங்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை – டக்ளஸ்

KN-daklasஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சரும் ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் எமக்கு ஏந்தவிதமான தொடர்பும் கிடையாது. எனினும் அரசியல் எதிரிகளே இவ்வாறான போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய கட்சியையும் தம்மையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் இவ்வாறு போலியான செய்திகளும் பிரச்சாரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது.

எவர் எந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தாலும் நாம் தமிழ் மக்களினதும் நாட்டினதும் நலனுக்காக தொடர்ந்தும் பாடுபடுவோம். மேலும் வட மாகாணசபைத் தேர்தல்களின் போது வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பிக்கும் தொடர்பு கிடையாது.

1994ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை படுகொலை செய்ய முயற்சித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களிலும் உண்மையில்லை.

இருப்பினும் இலங்கை அரசினால் முன்மொழியப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தமது கட்சி வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts