Ad Widget

நள்ளிரவு அதிபர் வீட்டின் மீது கல்வீச்சு! காலையே காவல்துறை வந்தது

நேற்று(7) மகாசிவராத்திரி தினமன்று நள்ளிரவு மதுபோதையில் வந்த இனந்தெரியாதவர்களால் யாழ் இந்துக்கல்லுாரி அதிபரின் உத்தியோக பூர்வ இல்லத்தின் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அதிபர் இல்லத்தில் இல்லை என்று அறியவருகின்றது.

கல்லுாரி வீதியில் கல்லுாரிக்கு முன்பாக  இருந்த அதிபர் இல்லத்தின் மீதே இந்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுப்போத்தல் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் போது கல்லுாரி பாதுகாப்பு உத்தியோகத்தர் வாள்  மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து அவசர அழைப்பின் ஊடாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் காலையிலேயே பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்லுாரியில் பொருத்தப்பட்ட பாதுகாப்புக்கமெராக்களின் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts