Ad Widget

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடைந்த நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததுடன், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்பின்னர் நேற்று மாலை 5.30 மணியளவில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போது, குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

http://www.e-jaffna.com/archives/84696

Related Posts