Ad Widget

நல்லூர் கந்தனின் திருவிழாவை 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின்படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Posts