நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் 39 பேரிடம் இன்று எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன
இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.