Ad Widget

நல்லூரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு இளைஞர்கள் கைது

arrest_1சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட 4 இளைஞர்களையும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts