Ad Widget

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனா

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வசிக்கும் வயோதிப பெண்மணியொருவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஓரிரு நாட்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு சென்றபோது, அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் மேலதிக நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts