Ad Widget

நகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

dd(19)யாழ். சாவகச்சேரி நகர சபையின் கீழ் பணியாற்றுவதற்காக 27 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று புதன்கிழமை (16) நகர சபையில் வழங்கப்பட்டன.

சுகாதாரத் தொழிலாளர்கள், சந்தை மேற்பார்வையாளர்கள், நூலகப் பரிசோதகர்கள், சாரதிகள், வெளிக்கள உத்தியோகத்தர் ஆகிய பதவிகளுக்கான நியமனக் கடிதங்களே வழங்கிவைக்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அனுமதியுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று, அந்த நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நகர சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் ஆகியோர் இணைந்து நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

Related Posts