Ad Widget

தோல்வியடைந்தமைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சந்திமால்

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி தோல்­வி­யுற்­ற­தற்கு காரணம் களத்­த­டுப்­பா­ளர்­கள்தான் என்று தினேஷ் சந்­திமால் தெரி­வித்­துள்ளார்.

ஒவ்­வொரு போட்­டியின் முடி­விலும் போட்டி குறித்து விளக்­க­ம­ளிக்க அந்­தந்த அணியின் வீரர் ஒருவர் அழைக்­கப்­ப­டுவார். அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து பேச சந்­திமால் வந்­தி­ருந்தார்.

அவரும் தோல்­விக்கு கார­ணத்தை சொல்­லி­விட்டு சென்­று­விட்டார். ஒவ்­வொரு ரசி­க­னுக்கும் பார்­வை­யா­ள­னுக்கும் தேவை போட்­டியில் வெற்­றியே தவிர தோல்­விக்­கான கார­ணங்கள் அல்ல.

ஒவ்­வொரு முறை தோற்­கும்­போது துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு, களத்­த­டுப்பு, அல்­லது ஆடு­களம் எமக்கு கைகொ­டுக்­க­வில்லை. இப்­படி இதில் ஏதோ ஒன்றை சொல்­லி­விட்டு சென்­று­வி­டு­வார்கள். தோல்­விக்கு கார­ணத்தை ரசி­கர்கள் கேட்­க­வில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு போட்டியை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே.

இவ்­வ­ளவு நீண்ட விளக்­கத்தைக் கொடுக்க காரணம் பங்­க­ளாதேஷ் அணி முதன் முத­லாக இலங்கை அணிக்­கெ­தி­ராக முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி ஒருநாள் போட்­டியில் வெற்­றி­பெற்­றி­ருக்­கி­றது. அதேபோல் முதல் முறை­யாக சொந்த மண்ணில் இலங்­கையை வீழ்த்­தி­யி­ருக்­கி­றது.

தம்­புள்ளை ரங்­கிரி மைதா­னத்தில் நடை­பெற்ற முதல் ஒருநாள் போட்­டியில் தமீம் இக்பால் பெற்ற சதத்தால் இலங்­கையை 90 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்­தி­யது பங்­க­ளாதேஷ். இலங்கை – பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்கு இடை­யி­லான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி முதலில் களத்­த­டுப்பை தெரி­வு­செய்­தது.

இலங்கை அணி விட்ட முதல் பிழையே இதுதான். தனது சொந்த மைதா­னத்தில் ஆடு­க­ளத்தின் தன்­மையை உணர்ந்­து­கொள்­ளாமல் ஆரம்­பத்தில் விட்ட பிழை முடிவில் தோல்­விக்கு இட்­டுச்­சென்­றது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணி இலங்கை அணியின் பந்­து­வீச்சை மிகவும் இல­கு­வாக ஆடியது.

இலங்கை அணியின் பந்­து­வீச்­சா­ளர்­களும் தொழில்­நுட்ப ரீதி­யாக பந்­து­வீ­ச­வில்லை என்றே சொல்­லலாம். ஏதோ 50 ஓவர் ­க­ளையும் வீசி முடிக்­க­வேண்டும் என்ற எண்ணம் மட்­டுமே அவர்­க­ளிடம் இருந்­ததைப் போலத்தான் தெரிந்­தது. சந்­திமால் குறிப்­பிட்­டது உண்­மைதான். இலங்கை அணியின் களத்­த­டுப்பு மிக மிக மோசமாக இருந்தது.

பங்­க­ளா­தேஷின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய தமீம் இக்பால் 47ஆவது ஓவர் ­வரை களத்தில் நின்று 127 ஓட்­டங்­களை விளா­சினார். சபீர் ரஹ்மான் (54), சஹிப் அல் – ஹசன் (72) ஆகி­யோரின் சிறப்­பான ஆட்­டத்தால் 50 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 324 ஓட்­டங்­களைக் குவித்­தது.

பின்னர் 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய இலங்கை அணி, சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டுக்­களை இழந்­ததால் 45.1 ஓவர்­களில் 234 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. இதனால் பங்­க­ளாதேஷ் அணி 90 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது.

இலங்கை அணியில் அதி­க­பட்­ச­மாக சந்­திமால் (59), திஸர பெரேரா (55) ஓட்­டங்­களைப் பெற்­றனர். இந்த வெற்­றியின் மூலம் பங்­க­ளாதேஷ் மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் 1–0 என முன்­னிலை பெற்­றுள்­ளது.

சொந்த மண்ணில் பங்­க­ளாதேஷ் அணிக்­கெ­தி­ராக ஒருநாள் போட்­டியை தோற்­றி­ருப்­பது இலங்கை அணிக்கு மிகப்­பெ­ரிய அடி. இன்னும் இரண்டு மாதங்­களில் சம்­பியன்ஸ் கிண்ணம் நடை­பெ­ற­வுள்­ளது. பங்­க­ளாதேஷ் தொடரை அதற்­கான பயிற்­சி­ ஆட்­ட­மாகக் கூட எடுத்து ஆடி­யி­ருக்­கலாம்.

ஆனால் இலங்கை அணியின் அச­மந்தப் போக்­கினால் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்தில் தகுதிகாண் சுற்றில் ஆடி பிரதான சுற்றுக்கு முன்னேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்தத் தோல்வியை பாடமாகக் கொண்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி வெற்றி கொண்டு தொடரை வெல்லுமா என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆட்ட நுட்பத்தையும் திறனையும் மாற்றிக்கொள்ளுமா இலங்கை அணி? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts