Ad Widget

தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 50 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தொழிற்பயிற்சி நிலையங்களை முதலில் திறப்பதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts