Ad Widget

தொலைபேசியில் மிரட்டினால் அறியத்தாருங்கள்; பொலிஸ் தலமையகம் அறிவிப்பு

Phoneதொலைபேசியில் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தொலைபேசியில் மிரட்டி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளலிவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளளன. அவ்வாறு பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் பற்றி அச்சமின்றி, அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மிரட்டி, பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக எந்த நபராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மிரட்டி பணம் கேட்டால், அது பற்றி, பயப்படாது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும். அல்லது கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்களாக 0112 444 480 அல்லது 0112 818 283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

Related Posts