Ad Widget

தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக திரண்ட தொண்டர் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணி புரியும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததுடன், நியமனம் வழங்கத் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண சபையின் முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்திருந்தனர்.

Related Posts