Ad Widget

தொடரும் கைதுகள், அச்சத்தில் மக்கள்

arrest_1பருத்தித்துறைமுனையில் கடலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் கடற்கரையில் வைத்து கடற் தொழிலுக்கு சென்று விட்டு கரைதிரும்பிய மீனவர்களான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான மோ.வின்சன்மரியதாஸ்(42) ,நான்கு பிள்ளைகளின் தந்தையான பத்திநாதன் ரெஜினோல்ட் (40), நான்கு பிள்ளைகளின் தந்தையான மிக்கேல்பிள்ளை(45) , ஐந்து பிள்ளைகளின் தந்தையான பாபு (44), மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜா (30) என்ற ஐவரையும், கரையில் காத்துநின்ற சிறிலங்கா புலனாய்வாளர்களும், காவற்துறையினரும் கைது செய்து பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு கொண்டுகொண்டுசென்ரனர் . பின்பு அங்கிருந்து கொண்டு சென்று வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts