Ad Widget

தேர்தல் விதிமுறைகளை மீறினார் : வடக்கு ஆளுநர்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்து கொண்டிருந்தார்.

alunar-chanthera-sri--1

எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பரப்புரைக்கூட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது .

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் தேர்தல் விதிமுறைகளை மீறி கலந்து கொண்டிருந்தார்.

அரச அதிகாரிகள் வேட்பாளர் சார்பிலான பரப்புரைக்கூட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை எனினும் அதனை ஆளுநர் மீறிவிட்டார்.

எனினும் இன்று ஆளுநருக்கு பரப்புரை மேடையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் ஜனாதிபதியுடன் துரையப்பாவிற்கு வந்தஆளுநர் பரப்புரை மேடைக்கு பின்புறத்தில் நின்று கொண்டிருந்தார் .

இதேவேளை, வடக்கு ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி இம்முறைத் தேர்தலில் மட்டுமல்ல கடந்த தேர்தல்களுக்கும் அரசு சார்பில் பரப்புரை மேற்கொண்டு வருவதுடன் மேடைகளிலும் பிரசன்னமாகுபவர்.

இதற்கு முன்னரும் பலமுறை தேர்தல் ஆணையாளரினாலும் வடக்கு ஆளுநர் எச்சரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts